Sunday 19 July 2015

விருத்தாஹாரம்

நடைமுறையில் இருக்கும் உணவு  பழக்கவழக்கங்களும், நாம் அதை பின்பற்றுவதும் சரியான முறையா?
      'உணவே மருந்து' என்பதை அறிந்த நாம், ஏன் அதன் ஆழமான கருத்தை ஏற்று கொள்ளாமல் வாழ்கிறோம்?
       காரணம் : நாக்கின் சுவைக்கு நாம் அடிமை ஆனதே மற்றும் அறியாமை
"உணவே மருந்து" என்பது மாறி "மருந்தே உணவு" என்பது தற்போதைய நிலைமை. இதை மாற்ற என்ன வழி? நம் உடலின் மேல் நாம் செலுத்தக் கூடிய அக்கறையே பிறகு நாம் மேற்கொள்ளும் உணவு பழக்கங்கள். இல்லையெனில் நோய்களால் அவதிப்பட கூடிய நேரம் வந்துவிடும். எ.கா. நாம் அறிந்த விசயம் தான், புளிப்பு ஆகாரமும் பாலும் சேர்த்து உண்ணக் கூடாது என்பது. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் நாம் அதை மாம்பழ பழரசம் என்று உட்கொள்கிறோம். இதுவே முதல் நோய்க்கு அடிக்கல். இது போல் நிறைய விஷயங்கள்....
      தீர்வு :உடற்பயிற்சி மேற்கொள்ளவது; உணவு பழக்கங்கள் மாற்றம் ஏற்படாமல் கவனமாக இருப்பதே.
      நல்ல உணவு பழக்கங்களால் ஆரோக்கியம் மேற்படும். 
             
            "உடல் நலத்தை பேணி காப்போம் ;நாட்டின் வளம் காப்போம் "

Jayashri,
Vayam

0 comments:

Post a Comment